Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வி

ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வி

By: Karunakaran Sun, 22 Nov 2020 2:57:58 PM

ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வி

உலகின் டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்று வருகிறது. இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் அரை இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

ரஷியாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் 3-6, 7-6, (7-4), 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மெட்வதேவ் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் முன்னேறி இருக்கிறார். மற்றொரு அரை இறுதியில் டொமினிக் தீம், ஜோகோவிச் இருவரும் மோதினர்.

atp,rafael nadal,semi-finals,tennis final ,ஏடிபி, ரஃபேல் நடால், அரையிறுதி, டென்னிஸ் போட்டி

விறுவிறுப்பாக நடத்த அரை இறுதி ஆட்டத்தில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 5 முறை சாம்பியனும், முதல் நிலை வீரருமான ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார்.

இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம்- மெட்வதேவ் மோதுகிறார்கள். இருவருமே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள னர். இதனால் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் ஆர்வத்தில் உள்ளனர்.

Tags :
|