Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நெய்மரிடம் 12 மில்லியன் டாலர் பணத்தை திரும்ப கேட்கிறது பார்சிலோனா அணி

நெய்மரிடம் 12 மில்லியன் டாலர் பணத்தை திரும்ப கேட்கிறது பார்சிலோனா அணி

By: Karunakaran Fri, 13 Nov 2020 6:22:35 PM

நெய்மரிடம் 12 மில்லியன் டாலர் பணத்தை திரும்ப கேட்கிறது பார்சிலோனா அணி

பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரராக நெய்மர் திகழ்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான பார்சிலோனாவுக்காக கடந்த 2013 முதல் 2017-வரை விளையாடினார். அதன்பின் கால்பந்து வரலாற்றில் மிகவும் அதிகத் தொகையான 222 மில்லியன் யூரோவிற்கு பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிக்கு சென்றார்.

பின்னர், 2013-ம் ஆண்டு பிரேசில் கிளப்பான சான்டோஸில் இருந்து பார்சிலோனாவுக்கு மாறினார். அப்போது நெய்மருக்கான உண்மையான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா மறைக்கிறது. இந்நிலையில், வரி முறைகேட்டை தவிர்ப்பதற்காக நெய்மருக்கு பார்சிலோனா அதிக அளவில் சம்பளம் கொடுக்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

barcelona,neymar,12 million,football player ,பார்சிலோனா, நெய்மர், 12 மில்லியன், கால்பந்து வீரர்

இந்த குற்றச்சாட்டுக்கு பின், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் பார்சிலோனா 11.8 மில்லியன் டாலர் தொகை கட்டியிருக்க வேண்டியதில்லை என சமீபத்தில் இந்த விவகாரத்தை முடித்து வைத்தனர். இதனால் நெய்மர் அந்தத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என பார்சிலோனா விரும்புகிறது.

கொரோனா வைரசால் பார்சிலோனா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால், வீரர்களை பெரிய அளவில் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில், வீரர்களின் சம்பளத்தை மிகப்பெரிய அளவில் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Tags :
|