Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ரோகித், இஷாந்த் இருவரும் 5 நாட்களுக்குள் கண்டிப்பாக புறப்பட வேண்டும்; ரவிசாஸ்திரி தகவல்

ரோகித், இஷாந்த் இருவரும் 5 நாட்களுக்குள் கண்டிப்பாக புறப்பட வேண்டும்; ரவிசாஸ்திரி தகவல்

By: Nagaraj Mon, 23 Nov 2020 6:41:03 PM

ரோகித், இஷாந்த் இருவரும் 5 நாட்களுக்குள் கண்டிப்பாக புறப்பட வேண்டும்; ரவிசாஸ்திரி தகவல்

ஐந்து நாட்களுக்குள் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா புறப்படவில்லை எனில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், காயம் காரணமாக இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் டெஸ்ட் தொடருக்கான அணியில் விளையாடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளர். இதனால் இருவரும் உடல்தகுதி பயிற்சியை தொடங்கியுள்ளனர். உடற்தகுதி பெற்றுவிட்டால் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :