Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டோனிக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் - இர்பான் பதான்

டோனிக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் - இர்பான் பதான்

By: Karunakaran Wed, 19 Aug 2020 6:18:26 PM

டோனிக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் - இர்பான் பதான்

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி, கடந்த சனிக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடவுள்ளார். அவரது ஓய்வு அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில் இர்பான் பதான், சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாட முடியுமா? என்ற நெருக்கடி அவருக்கு தற்போது விலகியுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். ஆகவே, டோனி முழு உத்வேகத்துடன் இருப்பார். பந்து விச்சாளர்கள் ஜாக்கிரதை என்று கூறியுள்ளார்.

bowlers,dhoni,irfan pathan,csk ,பந்து வீச்சாளர்கள், தோனி, இர்பான் பதான், சி.எஸ்.கே.

இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில், ஐபிஎல் போட்டியில் விளையாட வரும்போது, அனைத்து பந்து வீச்சாளர்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி போன்றவர்களுக்கு பந்து வீச விரும்பமாட்டார்கள். ஏனென்றால், டோனி முழு உத்வேகத்துடன் உள்ளார். உண்மையிலேயே நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைத்து பந்து வீச்சாளர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், டோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது மிகவும் அனுபவித்து விளையாடுவார். ஒரு பேட்ஸ்மேனாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 416 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 134.63 ஆகும். இதுவரை 190 போட்டிகளில் விளையாடி 4432 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|