- வீடு›
- விளையாட்டு›
- கேப்டன்களுக்கும் ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும் - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி
கேப்டன்களுக்கும் ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும் - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி
By: Karunakaran Fri, 16 Oct 2020 11:57:53 AM
13-வது ஐபிஎல் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் இதில் விளையாடி வருகின்றன. இந்நிலையில் சிஎஸ்கே - ஐதராபாத் இடையிலான போட்டி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஐதராபாத் அணி 19-வது ஓவரை விளையாடியபோது ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை வைடு என அறிவிக்க அம்பயர் கையை எடுத்தார்.
ஆனால் அந்தநேரம் பார்த்து நடுவரை தோனி முறைத்து பார்க்க, வைடு கொடுக்காமல் அம்பயர் செய்கையை மாற்றினார். சிஎஸ்கே கேப்டன் தோனியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதுகுறித்து விவாதித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து விராட் கோலி கூறுகையில், வைடு அல்லது இடுப்பு உயரத்துக்கு மேல் வரும் புல்டாஸ் பந்துகள் நோ-பால் போன்ற நடுவர் முடிவுகளின் மீது பீல்டிங் கேப்டனுக்கு ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும். ஏனெனில் ஐபிஎல் தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்கது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஒரு வேளை ஒரு ரன்னில் போட்டியை தோற்கும்போது ஏதாவது ஒரு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாத நிலையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.