Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • காவிரி கர்நாடகத்தின் சொத்தாம்... சொல்வது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல்

காவிரி கர்நாடகத்தின் சொத்தாம்... சொல்வது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல்

By: Nagaraj Tue, 26 Sept 2023 6:36:32 PM

காவிரி கர்நாடகத்தின் சொத்தாம்... சொல்வது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல்

பெங்களூரு: காவிரி கர்நாடகத்தின் சொத்து என்று இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

காவிரி நீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகர், நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

cauvery,cricket,india,karnataka,kl-rahul,player,property,registration ,இந்தியா, கர்நாடகம், காவிரி, கிரிக்கெட், கே.எல்.ராகுல், சொத்து, பதிவு, வீரர்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கர்நாடகாவை சேர்ந்த கே.எல்.ராகுலும் காவிரி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் குறித்து கே.எல்.ராகுல் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- ‘காவிரி எப்பொழுதும் எங்களுடையது (கர்நாடகம்), கர்நாடகாவில் காவிரி உற்பத்தியாகி இங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த தண்ணீரைப் பயன்படுத்த கன்னடர்கள் வீதியில் இறங்கி சட்டப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இது எங்கள் சோகம். காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து’ என பதிவிட்டுள்ளார். கே.எல்.ராகுலின் இந்த பதிவுக்கு கன்னடர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Tags :
|
|