Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்

By: Karunakaran Fri, 30 Oct 2020 3:37:09 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்தது இல்லை. ஆனால் இந்த முறை முதல் முறையாக 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது.

இது சென்னை அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னை அணி இதுவரை 13 ஆட்டங்களில் 5 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. தற்போது, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்ட னான டோனி ஓய்வு பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது.

chennai super kings,captain,dhony,retire ,சென்னை சூப்பர் கிங்ஸ், கேப்டன், டோனி, ஓய்வு

நேற்று போட்டி முடிந்ததும் டோனி டி-சர்ட்டில் தனது கையெழுத்தை இட்டு கொல்கத்தா அணி வீரர்கள் நிதிஷ்ரானாவுக்கு கொடுத்தார். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் ஜோஸ் பட்லருக்கு டோனி தனது டி-சர்ட்டில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்.

மும்பை அணியில் உள்ள ஹர்திக் பாண்ட்யா, குர்னல் பாண்ட்யா ஆகியோருக்கும் தான் கையெழுத்திட்ட டி-சர்ட்டை வழங்கி இருந்தார். இதனால் டோனி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியை டோனியே வழிநடத்துவார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|