Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை துபாய் செல்கிறது

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை துபாய் செல்கிறது

By: Karunakaran Thu, 20 Aug 2020 5:27:07 PM

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை துபாய் செல்கிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது.

துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். தற்போது, ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மதியம் துபாய்க்கு புறப்பட்டு செல்லவுள்ளது.

chennai super kings,dubai,ipl,harbhajan singh ,சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், ஐபிஎல், ஹர்பஜன் சிங்

இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி கூறுகையில், ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மதியம் துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது. 180 பேர் செல்லக்கூடிய விமானத்தில் 60 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன், அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து அவர் துபாய் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|