Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது

சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது

By: Karunakaran Mon, 21 Sept 2020 5:53:03 PM

சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது

13-வது ஐ.பி.எல் போட்டி அமீரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் போட்டி தொடங்கியது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை (22-ந்தேதி) எதிர் கொள்கிறது. சார்ஜாவில் இந்த 2-வது ஆட்டம் நடக்கவுள்ளது.

chennai team,rajasthan royal,2nd match,ipl ,சென்னை அணி, ராஜஸ்தான் ராயல், 2 வது போட்டி, ஐ.பி.எல்

மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுபோல் ராஜஸ்தானுக்கு எதிராகவும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். நாளைய போட்டிக்கான சி.எஸ்.கே. அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. காயத்தில் இருந்து குணம் அடையாத பிராவோ நாளைய போட்டியிலும் ஆட மாட்டார்.

சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பட்லர் நாளைய ஆட்டத்தில் விளையாடமாட்டார். இரு அணிகளும் இது வரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14-ல், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

Tags :