Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By: vaithegi Tue, 30 May 2023 09:34:27 AM

5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என அறிவித்த நிலையில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று நிலை ஏற்பட்டது.5-வது பந்தை ஜடேஜா சிக்ஸர் ஆக மாற்றினார் .

chennai super kings,principal stalin ,சென்னை சூப்பர் கிங்ஸ் ,முதல்வர் ஸ்டாலின்

இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடைசி பந்தை பவுண்டரியாக்கி வெற்றியை சிஎஸ்கே வசப்படுத்தினார். இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் இருக்கும் தோனி என்ற மனிதனின் கீழ் ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு உள்ளார். மேலும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளார் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

Tags :