Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • வயிற்று கோளாறில் இருந்து மீண்டு பெங்களூர் அணிக்கு எதிராக களம் இறங்கும் கிறிஸ் கெய்ல்

வயிற்று கோளாறில் இருந்து மீண்டு பெங்களூர் அணிக்கு எதிராக களம் இறங்கும் கிறிஸ் கெய்ல்

By: Karunakaran Tue, 13 Oct 2020 10:14:52 PM

வயிற்று கோளாறில் இருந்து மீண்டு பெங்களூர் அணிக்கு எதிராக களம் இறங்கும் கிறிஸ் கெய்ல்

13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இறுதியில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அந்த அணி கடுமையாக செய்ய வேண்டும். 7 போட்டிகளிலும் ஆறில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் அணி நாளைமறுநாள் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்தால் அந்த அணிக்கு பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதனால் முதல் பாதியில் பட்டி அடிக்கு பதிலடி கொடுக்க விரும்பும். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் உள்ளார். அவர் இதுவரை களம் இறங்கவில்லை.

chris gayle,field,bangalore,stomach ache ,கிறிஸ் கெய்ல், களம், பெங்களூர், வயிற்று வலி

கிறிஸ் கெய்ல் வயிற்று கோளாறு காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது அதில் இருந்து குணமடைந்து விட்டார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் எங்கள் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பவர் என்று கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெய்ல் இனி பஞ்சாப் அணியில் இணைய உள்ளதால், பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி முன்னேறலாம். இந்த சீசனில் பஞ்சாப்,சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றன.

Tags :
|