Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவைச் சார்ந்த 5 பேருக்கு கொரோனா...கிரிக்கெட் ரசிர்கள் கவலை

சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவைச் சார்ந்த 5 பேருக்கு கொரோனா...கிரிக்கெட் ரசிர்கள் கவலை

By: Monisha Sat, 29 Aug 2020 12:03:40 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவைச் சார்ந்த 5 பேருக்கு கொரோனா...கிரிக்கெட் ரசிர்கள் கவலை

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது. இந்தப் போட்டியில் விளையாட சென்னை சிஎஸ்கே அணியினர் கடந்த 21 ஆம் தேதி துபாய்க்கு சென்றனர். அங்குச் சென்ற வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. தற்போது சென்னையில் இருந்து சென்ற சிஎஸ்கே குழுவினருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 5 பேருக்கு கொரோனா இருப்பதை சிஎஸ்கே அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து ஐபிஎல் விளையாட சென்ற 51 பேர் கொண்ட குழுவில் நடத்தப்பட்ட சோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவைச் சார்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரும் அடக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

chennai super kings,ipl match,corona virus,vulnerability,cricket ,சென்னை சூப்பர் கிங்ஸ்,ஐபிஎல் போட்டி,கொரோனா வைரஸ்,பாதிப்பு,கிரிக்கெட்

இதனால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தல் அவசியம் என ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத்தவிர மற்றுமொரு செய்திக் குறிப்பில் 12 உதவி பணியாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் என 13 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறியிருக்கிறது. இந்தத் தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலையும் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கிறது. கடந்த 5 மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாத நிலையில் ஐபிஎல் போட்டியை கிரிக்கெட் ரசிர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஐபிஎல் தொடங்க விருக்கும் நேரத்தில் இப்படியொரு தகவல் வெளியாகி இருப்பதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Tags :