- வீடு›
- விளையாட்டு›
- விராட்கோலியின் கேப்டன்ஷிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை; காம்பீர் விமர்சனம்
விராட்கோலியின் கேப்டன்ஷிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை; காம்பீர் விமர்சனம்
By: Nagaraj Tue, 01 Dec 2020 12:59:15 PM
விராட்கோலியின் கேப்டன்ஷிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் 66 மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய பந்து வீச்சை வெளுத்து கட்டிய ஆஸ்திரேலிய வீரர்கள் 374, 389 ரன்கள் குவித்தனர். இந்திய அணி பேட்டிங்கில் 2 போட்டிகளிலும் 300 – கடந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணியின் மீது குறிப்பாக கேப்டன் கோலியின் முடிவு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட்கோலியின் முடிவு மோசமானது. அவரது யுக்தியை புரிந்து கொள்ள முடியவில்லை.
இதுபோல் உலக கிரிக்கெட்டில் வேறு எந்தவொரு கேப்டனும் முடிவு
எடுக்கமாட்டார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்
கவுதம் கம்பீர் சாடியுள்ளார். இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த
பேட்டியில் கூறியிருப்பதாவது:
விராட்கோலியின் கேப்டன்ஷிப்பை
என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியின் வலுவான பேட்டிங்கை
கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானதாகும்.
ஆனால் முதன்மையான பந்து வீச்சாளர் பும்ராவுக்கு தொடக்க கட்டத்தில் 2 ஒவர்
மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கிறீர்கள். இந்த முடிவு மிகப்பெரிய
தவறாகும்.
பும்ரா போன்ற வீரருக்கு முதலில் 2 ஓவர் மட்டுமே பந்து வீச
வாய்ப்பு அளித்து விட்டு, 10-வது ஓவருக்கு பிறகு மீண்டும் வாய்ப்பு
அளித்தால் பந்து பழசாகி விடும். அப்போது அவரால் எப்படி விக்கெட் வீழ்த்த
முடியும் என்று எதிர்பார்க்க முடியும்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்
ஆரோன் பிஞ்ச் அந்த அணியின் சிறந்த பவுலரான ஹேசில்வுட்டுக்கு முதல் இரண்டு
ஆட்டங்களில் தொடக்க கட்டத்தில் எப்படி 5 மற்றும் 6 ஓவர்கள் பந்து வீச
வாய்ப்பு அளித்தார். அதேபோல் அந்த அணியின் 6-வது பவுலர் வாய்ப்பையும் அவர்
நேர்த்தியாக கையாண்டார்.
கடந்த 5 அல்லது 7 ஒருநாள் போட்டிகளில்
சாதனைகளை பார்த்தால், அதில் ஸ்டீவன் சுமித் 3 சதங்களை அடித்துள்ளார். இதில்
கடைசி 2 போட்டிகளில் அவர் 62 பந்துகளில் 2 சதம் அடித்துள்ளார். ஆட்ட திறனை
பொறுத்தமட்டில் விராட்கோலிக்கும், ஸ்டீவன் சுமித்துக்கும் இடையே பெரிய
வித்தியாசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.