- வீடு›
- விளையாட்டு›
- தோனியை கவுரவிக்க முடிவு செய்து இருக்கோம்... மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டம்
தோனியை கவுரவிக்க முடிவு செய்து இருக்கோம்... மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டம்
By: Nagaraj Tue, 04 Apr 2023 11:07:25 PM
மும்பை: மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு... இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக ஒருநாள் உலக கோப்பை சாம்பியன் ஆனது. இறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை வீரர் குலசேகரா வீசிய 48வது ஓவரின் 2வது பந்தை தோனி சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தது போட்டியின் முக்கியமான தருணம். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கவுரவிக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றதை நினைவுகூரும் வகையில், வான்கடே மைதானத்தில் சிறிய வெற்றி நினைவு சின்னம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தோனியின் ‘வின்னிங் ஷாட்’ சிக்ஸரை கவுரவிக்கும் வகையில் இந்த தளம் திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிக்ஸரை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் எழுப்பப்படுவது இதுவே முதல்முறை.