Advertisement

கொரோனாவிலிருந்து குணமாகி பயிற்சியில் இணைந்த தீபக் சஹார்

By: Nagaraj Fri, 11 Sept 2020 7:48:18 PM

கொரோனாவிலிருந்து குணமாகி பயிற்சியில் இணைந்த தீபக் சஹார்

வந்துட்டேன்னு சொல்லு... கொரோனாவிலிருந்து குணமாகி வந்துட்டேன்னு சொல்லு என்று சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், இதர வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது.

துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிக்காக துபாய், அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

deepak sahar,csk player,corona,recovered ,தீபக் சஹார், சிஎஸ்கே வீரர், கொரோனா, குணமடைந்தார்

இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த இரு வீரர்கள் தவிர மற்ற சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினார்கள். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், குணமடைந்துள்ளார்.

இதையடுத்து செம தெம்புடன் அணியினருடன் அவர் இணைந்துள்ளார். சில பரிசோதனைகளுக்குப் பிறகு பயிற்சியைத் தொடங்க தீபக் சஹாருக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இத்தகவலை சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிஎஸ்கே வீரர்களுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார் தீபக் சஹார்.

Tags :
|