Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

By: Karunakaran Tue, 03 Nov 2020 08:36:52 AM

பெங்களூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றபோது, ஆர்சிபியும் டெல்லி அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோஷ் பிலிப் 12 ரன்னிலும், விராட் கோலி 29 ரன்னிலும் அவுட்டாகினர். தேவ்தத் படிக்கல் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து 50 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 17 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் அடித்தது. டெல்லி அணியில் நோர்ஜோ 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இறுதியில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

delhi,bangalore,play-off round,ipl 2020 ,டெல்லி, பெங்களூர், பிளே-ஆஃப் சுற்று, ஐபிஎல் 2020

அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 54 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அஜிங்கியா ரகானேவும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் ரிஷப் பண்ட்டும், ஸ்டோய்னிசும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

Tags :
|