Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

By: Karunakaran Mon, 21 Sept 2020 2:55:13 PM

ஐபிஎல் சீசனில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. இதில் இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

அதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 55 ரன்களை எடுத்து தத்தளித்தது. பின்னர் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனியாக போராடி 60 பந்தில் 89 ரன் குவித்து அவுட்டானார்.

delhi,punjab,super over,ipl season ,டெல்லி, பஞ்சாப், சூப்பர் ஓவர், ஐபிஎல் சீசன்

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.

அதன்பின் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், காட்ரெல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags :
|
|