Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அசத்தலான பந்து வீச்சினால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி

அசத்தலான பந்து வீச்சினால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி

By: Karunakaran Sat, 26 Sept 2020 1:52:19 PM

அசத்தலான பந்து வீச்சினால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி

13-வது ஐபில் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

பிரித்வி ஷா அரைசதம் அடித்தார் பிரித்வி ஷா. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் அடித்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 64 ரன்னிலும், தவான் 35 ரன்னிலும் அவுட்டாகினர். அதன்பின், 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

delhi capitals,44 runs,stunning delivery,csk

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 10 ரன்னிலும், வாட்சன் 14 ரன்னிலும் அவுட்டாகினர். டூ பிளசிஸ், கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. ஜாதவ் 26 ரன்னிலும் டூ பிளசிஸ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது. டோனி 15 ரன்னில் அவுட்டானார்.

டெல்லி அணி கட்டுக்கோப்பாக பந்து வீசி அசத்தி, பீல்டிங்கும் சிறப்பாக செய்தது. இதனால் சென்னை அணி ரன்கள் எடுக்க முடியவில்லை. சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Tags :