Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தோனி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம்... ஷேன் வாட்சன் உறுதி

தோனி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம்... ஷேன் வாட்சன் உறுதி

By: Nagaraj Mon, 20 Mar 2023 11:11:58 PM

தோனி அடுத்த  நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம்... ஷேன் வாட்சன் உறுதி

மும்பை: தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம் என்று சென்னை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

2023 ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான தற்போதைய சாம்பியனான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு தற்போது 41 வயதாகிறது.

எனவே இந்த ஐபிஎல் சீசனுடன் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

csk,dhoni,former player,ipl, ,ஐபிஎல், சிஎஸ்கே., தோனி, முன்னாள் வீரர்

ஒருவேளை இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற்றால், புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு சென்னை அணி நிர்வாகம் தள்ளப்படலாம்.

தோனியின் ஓய்வு குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்று நான் நினைக்கவில்லை, தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம் என்று சென்னை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இது என்று கேள்விப்பட்டேன். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகள் விளையாடலாம். அவர் இன்னும் நல்ல நிலையில் இருக்கிறார். மேலும், பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார்.

அவரது ஆட்டத்தை போலவே அவரது கேப்டன்ஷிப்பும் மிகவும் சிறப்பான ஒன்று. அவரது உடற்தகுதி மற்றும் ஆட்டத்தை புரிந்து கொள்ளும் திறன் அவரை ஒரு சிறந்த கேப்டனாக்குகிறது. மைதானத்தில் அவரது திறமை அபாரமானது. சிஎஸ்கே வெற்றி பெற தோனியும் ஒரு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|
|