- வீடு›
- விளையாட்டு›
- டி20 உலகக் கோப்பையில் விளையாட பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் டோனியால் மறுக்க முடியாது - அக்தர்
டி20 உலகக் கோப்பையில் விளையாட பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் டோனியால் மறுக்க முடியாது - அக்தர்
By: Karunakaran Wed, 19 Aug 2020 5:56:14 PM
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, கடந்த சனிக்கிழமை இந்திய சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். டோனியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால் டோனி ஓய்வு முடிவை விரைவில் அறிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது, டோனியின் ஒய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இதுகுறித்து கூறுகையில், டோனிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. அவர் 2021 டி-20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம். இருந்தாலும் ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. இந்திய பிரதமர் மோடி தோனியிடம், 2021 டி-20 உலகக் கோப்பை வரை விளையாடலாம் என்று கோரிக்கை வைக்கலாம் என்று கூறினார்.
மேலும் அவர், அப்படி மோடி கோரிக்கை வைத்தால் அதை டோனியால் மறுக்க முடியாது. இதுபோன்று நிகழ்வுகள் பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளது. டோனி விரும்பினால் அவருக்கு விடைகொடுக்கும் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று கூறினார்.