- வீடு›
- விளையாட்டு›
- தோனி 3வது வரிசையில் களமிறங்க வேண்டும்; கவுதம் கம்பீர் கருத்து
தோனி 3வது வரிசையில் களமிறங்க வேண்டும்; கவுதம் கம்பீர் கருத்து
By: Nagaraj Wed, 02 Sept 2020 09:31:21 AM
ஐ.பி.எல். போட்டியில் தோனி 3 வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது, இந்தநிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
ஒரு வருடத்திற்குப் பின்னர் ஐபிஎல் போட்டியின் மூலம் தோனி கிரிக்கெட் போட்டிக்கு களம் திரும்புகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேபோல் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவின் திடீர் விலகலை
அடுத்து தோனியின் மீதான நம்பிக்கை கொண்டே சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஒரு
பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “ஐ.பி.எல். போட்டியில்
திடீரென சிஎஸ்கே அணியில் இருந்து சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ்
ரெய்னா விலகி உள்ளார்.
நிச்சயம் இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும்
அதிர்ச்சியாகவே இருக்கும். நிச்சயம் அதனை ஈடுகட்டும் வகையில் தோனி 3 வது
வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும்.
நீண்ட காலமாக கிரிக்கெட்
மைதானத்தில் விளையாடாத தோனி 3 வது வரிசையில் இறங்கினால், அவருக்கான
வாய்ப்பை நிச்சயம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.