Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மூன்று முறை தோல்வியடைந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் - ரிக்கி பாண்டிங்

மூன்று முறை தோல்வியடைந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் - ரிக்கி பாண்டிங்

By: Karunakaran Tue, 10 Nov 2020 07:15:04 AM

மூன்று முறை தோல்வியடைந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் - ரிக்கி பாண்டிங்

13- வது ஐபிஎல் போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், மும்பை, டெல்லி, பெங்களூர்,ஹைதராபாத் அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், 13-வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டி நாளை துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த சீசனில் 2 லீக், குவாலிபையர்-1 என மூன்று முறை டெல்லியை மும்பை இந்தியன்ஸ் துவம்சம் செய்துள்ளது. இருந்தாலும் எங்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

mumbai team,delhi team,ipl2020,ricky ponting ,மும்பை அணி, டெல்ஹி அணி, ஐபிஎல் 2020, ரிக்கி பாண்டிங்

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில், பின்னோக்கி பார்த்தீர்கள் என்றால், இது சிறந்த சீசன். இருந்தாலும் நாங்கள் இதுவரை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றவில்லை. நாங்கள் இங்கே வந்தது, கோப்பையை வெல்வதற்குதான். எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்த தொடரில் சிறந்த அணியாக திகழ்ந்த வேலையில் தொடர்ந்து நான்னு தோல்வி என்பதை விரக்தியை ஏற்படுத்தியது. முக்கியமான போட்டியில் ஆர்சிபிக்கு எதிராகவும், நேற்று ஐதராபாத்துக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஐபிஎல் இறுதிப் போட்டியை எளிதாக நினைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :