Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகளின் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகளின் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

By: Nagaraj Sun, 19 July 2020 11:07:10 AM

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகளின் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து

மழையால் கைவிடப்பட்டது... இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை டிக்ளேர் செய்தது.

rain,dropped atom,england,west indies ,மழை, ஆட்டம் கைவிடப்பட்டது, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள்

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 6 ரன்களுடனும், நைட் வாட்ச்மேன் அல்சாரி ஜோசப் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கவிருந்தது. ஆனால், தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது.

Tags :
|