Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் இல்லை

கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் இல்லை

By: Karunakaran Fri, 21 Aug 2020 7:15:57 PM

கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் இல்லை

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போர்டுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு ஆரம்ப காலக்கட்டத்திலேயே வேலைப்பார்க்கும் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் வேலை வாங்கி கொடுத்தது.

மற்ற போர்டுகள் சம்பளம் குறைப்பை செய்தது. இருப்பினும் இதில் பிசிசிஐ மட்டும் சம்பளம் குறைப்பு, ஆட்கள் குறைப்பு எதையும் செய்யவில்லை. சுமார் ஐந்து மாதம் பிசிசிஐ எந்தவித சிக்கலையும் சந்திக்காமல், சரியான நேரத்தில் வீரர்களுக்கான சம்பளத்தொகை போன்றவற்றை ரிலீஸ் செய்தது. இப்படியே தொடர்ந்தால் சம்பளம் பிடித்தம், ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பெயரை வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

cricket,bcci,salary,indian cricket ,கிரிக்கெட், பி.சி.சி.ஐ, சம்பளம், இந்திய கிரிக்கெட்

இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், சம்பளம் பிடித்தம் குறித்து நாங்கள் இதுவரை விவாதம் செய்யவில்லை. ஆனால், இதுகுறித்து ஒரு கூட்டத்தில் விவாதிக்க இருக்கும். சம்பளம் பிடித்தம், வேலை நீக்கம் போன்றவற்றை செய்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை மனதில் வைத்து, முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், சம்பளம் பிடித்தம், வேலை நீக்கம் ஆகியவற்றிற்கு மிகமிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இனியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே சென்றால் சம்பளம் பிடித்தம், வேலை நீக்கம் ஆகியவை அதிகளவில் நடைபெறலாம் என கருதப்படுகிறது.

Tags :
|
|