Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சிறந்த காட்சியை அரங்கேற்ற எதிர்பார்த்துள்ளோம் - ஸ்டீவ் ஸ்மித்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சிறந்த காட்சியை அரங்கேற்ற எதிர்பார்த்துள்ளோம் - ஸ்டீவ் ஸ்மித்

By: Karunakaran Mon, 21 Sept 2020 6:15:24 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சிறந்த காட்சியை அரங்கேற்ற எதிர்பார்த்துள்ளோம் - ஸ்டீவ் ஸ்மித்

ஐ.பி.எல். கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7-வது இடத்தையே பிடித்தது. இதனால் தற்போது சிறப்பான வகையில விளையாட விரும்புகிறது. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக மோதவுள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் விளையாடவில்லை. இருப்பினும் மீதமுள்ள சிறந்த வீரர்களை கொண்டு சிறந்த காட்சியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியை உண்மையிலேயே தவறவிட்டேன். துபாய்க்கு வந்து இரண்டு நாட்கள் நல்ல முறையில் ஓய்வு எடுத்தேன். அதன்பின் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டேன். நேற்று ஜிக்-ஜாக் ரன்னிங் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இன்று விளையாடுவதற்கு அனுமதி பெற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

great show,chennai super kings,steve smith,ipl ,சிறந்த நிகழ்ச்சி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஐ.பி.எல்

மேலும் அவர், இன்று வலைப்பயிற்சி மேற்கொண்டு நாளை போட்டிக்கு தயாராகிவிடுவேன் என்று நம்புகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரகள் கடந்த ஒரு மாதமாக இங்கே உள்ளனர். சிறப்பான முறையில் பயிற்சி மேற்கொண்டதாக அறிந்தேன். இது அனுபவ மற்றும் இளம் வீரர்களுக்கு சிறப்பாக அமைந்தது. நாங்கள் இந்த வருட்ம சிறப்பு வாய்ந்த அணியை பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே வலிமையான அணி. போட்டிக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நாங்கள் பார்த்தோம். சென்னை சிறப்பாக விளையாடி போட்டியை முடித்தார்கள். சென்னை அணிக்கெதிராக சிறப்பான நிகழ்ச்சியை நடத்துவோம், தொடரை சிறப்பாக தொடங்குவோம் என்று நம்புகிறோம் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Tags :