Advertisement

பரிசோதனை முடிவுகள் வெளியானது; தோனிக்கு கொரோனா இல்லை

By: Nagaraj Fri, 14 Aug 2020 4:04:54 PM

பரிசோதனை முடிவுகள் வெளியானது; தோனிக்கு கொரோனா இல்லை

கிரிக்கெட் வீரர் தோனிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரரும், அந்த அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சென்னையில் நாளை (ஆகஸ்ட் 15) முதல் வலைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று (ஆகஸ்ட் 14) ராஞ்சியில் இருந்து சென்னை வருகிறார்.

தமது சென்னை பயணத்தை தொடங்கும் முன், ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் இருந்தப்படி, தோனி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

cricketer dhoni,experiment,no corona,fans ,கிரிக்கெட் வீரர் தோனி, பரிசோதனை, கொரோனா இல்லை, ரசிகர்கள்

இதில் தோனிக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திட்டமிட்டப்படி இன்று சென்னை வந்தடைவார் எனத் தெரிகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள தோனிக்கு பரிசோதனையில் கொரோனா இல்லை என்று வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள எட்டு அணி வீரர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் குறைந்தபட்சம் நான்கு முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு தான் இத்தொடரில் விளையாட முடியும் என்று பிசிசிஐ அறிவிித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :