Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலியா தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்பு குறித்து ரசிகர்களின் கருத்து

ஆஸ்திரேலியா தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்பு குறித்து ரசிகர்களின் கருத்து

By: Nagaraj Sun, 22 Nov 2020 10:13:40 PM

ஆஸ்திரேலியா தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்பு குறித்து ரசிகர்களின் கருத்து

ஆஸ்திரேலியா தொடரே ரிஷப் பண்ட்டுக்கு கடைசி தொடராகவும் இருக்கலாம் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றுள்ளது. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 2020 என அனைத்து விதமான போட்டியிலும் ஆட உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் முதன்மை விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா தேர்ந்தெடுக்கப்பட்டார். பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் சாஹா டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது. அதன் காரணமாக ரிஷப் பண்ட்டுக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் வாய்ப்பை இழந்த ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் மட்டுமே மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

rishabh pund,last series,australia,fans ,ரிஷப் பண்ட், கடைசி தொடர், ஆஸ்திரேலியா, ரசிகர்கள்

ஆனால், விரிதிமான் சாஹா தற்போது காயத்தில் இருந்து மீண்டு பேட்டிங் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் அவரே டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பார் என தெரிகிறது.

2020 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அவரை விட சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், விரிதிமான் சாஹா என அவருக்கு போட்டியாக உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள்.

அதனால் ஆஸ்திரேலியா தொடரே ரிஷப் பண்ட்டுக்கு கடைசி தொடராகவும் இருக்கலாம். இதை அடுத்து அவர் மீண்டும் அணியில் இடம் பெற 2021 ஐபிஎல் தொடரை தான் நம்ப வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :