Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி

மன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி

By: Karunakaran Thu, 13 Aug 2020 1:29:25 PM

மன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய ஆக்கி அணி பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் உள்ள பயிற்சி முகாமிற்கு வந்தது. அப்போது பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

இதில் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர்குமார், ஜஸ்கரன்சிங், வருண்குமார், கிரிஷன் பஹதுர் பதாக், மன்தீப் சிங் ஆகிய 6 வீரர்கள் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் சாய் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மன்தீப் சிங்குக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு வழக்கமானதை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

mandeep singh,indian hockey players,hospital,corona virus ,மந்தீப் சிங், இந்திய ஹாக்கி வீரர்கள், மருத்துவமனை, கொரோனா வைரஸ்

தற்போது மற்ற 5 ஆக்கி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மன்தீப் சிங் சேர்க்கப்பட்டு இருக்கும் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 6 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தற்போது தகவல் வெளியானது.

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகளுக்கான பயிற்சி முகாம் வருகிற 19-ந் தேதி தொடங்கும் என ‘சாய்’ அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆக்கி இந்தியா நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :