Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக பி.எஸ்.ஜி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக பி.எஸ்.ஜி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

By: Karunakaran Thu, 20 Aug 2020 5:53:51 PM

சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக பி.எஸ்.ஜி. அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும், ஆர்.பி.லெப்ஜிக் அணியும் மோதிக்கொண்டன.

இந்த அரையிறுதி ஆட்டத்தில் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், பந்தை கடத்திச்சென்று கோல் நோக்கி துல்லியமாக அடிப்பதிலும் பி.எஸ்.ஜி. அணி வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. 6-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி. வீரர் நெய்மார் நெருக்கமாக வந்து அடித்த பந்து கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவியது.

first time,champions league,psg team,final ,முதல் முறையாக, சாம்பியன்ஸ் லீக், பி.எஸ்.ஜி அணி, இறுதிப் போட்டி

13-வது நிமிடத்தில் கிடைத்த பிரிகிக் வாய்ப்பில் உதைக்கப்பட்ட பந்தை பி.எஸ்.ஜி. வீரர் மர்கியூனோஸ் தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார். அதன்பின் பி.எஸ்.ஜி. வீரர்கள் ஏஞ்சல் டி மரியா 42-வது நிமிடத்திலும், ஜூவான் பெர்னட் வெலஸ்கோ 56-வது நிமிடம்)த்திலும் கோல் போட்டு அசத்தினர்.

லெப்ஜிக் அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. இந்த அரையிறுதி ஆட்டத்தில், பி.எஸ்.ஜி. அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பி.எஸ்.ஜி. அணிசாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது. வருகிற 23-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அல்லது லயன் ஆகிய அணிகளில் ஒன்றை பி.எஸ்.ஜி. சந்திக்கும்.

Tags :