- வீடு›
- விளையாட்டு›
- மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை நியமனம்
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை நியமனம்
By: Nagaraj Mon, 06 Feb 2023 10:15:06 AM
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து மகளிர் அணி முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்களுக்கான ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதை ஏற்று பெண்களுக்கான முதல் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மும்பையில் மார்ச் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.
இந்தப் போட்டிக்கு ‘மகளிர் பிரீமியர் லீக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு வாங்கியது.
தற்போது மும்பை அணியின் பயிற்சியாளர்களை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அணியின் ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தேவிகா பால்ஷிகர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.