Advertisement

இந்திய அணி கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமனம்

By: Nagaraj Sun, 01 Jan 2023 1:28:11 PM

இந்திய அணி கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமனம்

புதுடில்லி: இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரராகவும் ஆல்ரவுண்டராக ஜொலித்து வருபவர் ஹர்த்திக் பாண்டியா. சமீபத்தில், டி-20 உலகக் கோப்பை, வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இந்தியா தோல்வியுற்றதை அடுத்து ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென முன்னாள் வீரர்கள் கூறினர்.

pandya,amit shah,nominated,captain,home minister ,
பாண்ட்யா, அமித்ஷா, நியமனம், கேப்டன், உள்துறை அமைச்சர்

இந்த நிலையில், வரும் ஜனவரி 3 ஆம் தேதி, இலங்கைக்கு எதிராக நடக்கும் முதல் டி-20 போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பு வகிக்கவுள்ளார். சூர்யகுமார் யாதவ் துணைக் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மார் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று பாண்ட்யா சகோதர்கள் சந்தித்துப் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து, ஹர்த்திக் பாண்டியா டுவீட் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|