Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, இவர் தான் - சுரேஷ்ரெய்னா கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, இவர் தான் - சுரேஷ்ரெய்னா கருத்து

By: Karunakaran Thu, 30 July 2020 7:22:37 PM

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, இவர் தான் - சுரேஷ்ரெய்னா கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த டோனி, ரோகித் சர்மா தான் என்று நான் சொல்வேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், அவரது செயல்பாடுகளை நான் பார்த்து இருக்கிறேன். அவர் மிகவும் அமைதியானவர் என சுரேஷ் ரெய்னா புகழ்ந்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தானே முன்னின்று ரோகித் சர்மா அணியை வழிநடத்துவதை விரும்பக்கூடியவர். அணியை முன்னின்று நடத்தும் அதேநேரத்தில் வீரர்களின் ஓய்வறை சூழலுக்கும் மதிப்பு அளிப்பவர். அப்படி செயல்படும் போது நீங்கள் எல்லாம் கிடைத்தது போன்று உணருவீர்கள் என ரோகித் சர்மா குறித்து சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

dhoni,indian cricket team,suresh raina,rohit sharma ,தோனி, இந்திய கிரிக்கெட் அணி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது அணி கோப்பையை வென்றபோது அவரது தலைமையின் கீழ் நான் விளையாடி உள்ளேன். டோனிக்கு அடுத்து முன்னணி வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா விளங்குகிறார். டோனி புத்திசாலியான கேப்டன். ஆனால் டோனியையும் விட அதிக ஐ.பி.எல். கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

மேலும் அவர், இருவருடைய கேப்டன்ஷிப் பண்பும் ஒரே மாதிரி தான் இருக்கும். இருவருமே மற்றவர்களின் கருத்தை கவனிக்கக்கூடியவர்கள். உங்கள் கேப்டன் மற்றவர்கள் சொல்வதை கவனித்தாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும்.என்னை பொறுத்தமட்டில் இருவரும் அற்புதமான கேப்டன்கள் என்று கூறியுள்ளார்.

Tags :
|