- வீடு›
- விளையாட்டு›
- டெல்லி அணிக்கு 220 என்ற மாபெரும் வெற்றி இலக்கு நிர்ணயிப்பு
டெல்லி அணிக்கு 220 என்ற மாபெரும் வெற்றி இலக்கு நிர்ணயிப்பு
By: Nagaraj Tue, 27 Oct 2020 10:18:45 PM
வெற்றிக்கு 220 ரன்கள் என்ற மாபெரும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது டெல்லி அணிக்கு.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐதராபாத் சன்ரைசஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டதஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் விருத்திமான் சஹா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
இதனால் ஐதராபாத் அணியின் ரன் விகிதம் கணிசமாக உயர்ந்த்து. அதிரடியாக ஆடி
அரைசதம் கடந்த டேவிட் வார்னர் அணியின் ஸ்கோர் 107 (9.4 ஓவர்கள்) ரன்களாக
உயர்ந்தபோது ஆட்டமிழந்தார். 34 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி 2
சிக்சருடன் 66 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து தனது ஆட்டத்தில்
மேலும் அதிரடியை கூட்டிய விருத்திமான் சஹா 45 பந்துகளில் 12 பவுண்டரி 2
சிக்சருடன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய
விளையாடிய மனிஷ் பாண்டே 31 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 44
ரன்களும், வில்லியம்சன் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட
20 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள்
எடுத்துள்ளது. இதனையடுத்து 220 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி
களமிறங்கவுள்ளது.