Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய அணியில் இடம் பிடிப்பேன்... கிரிக்கெட் வீரர் நடராஜன் சூளுரை

இந்திய அணியில் இடம் பிடிப்பேன்... கிரிக்கெட் வீரர் நடராஜன் சூளுரை

By: Nagaraj Tue, 13 Dec 2022 11:06:08 PM

இந்திய அணியில் இடம் பிடிப்பேன்... கிரிக்கெட் வீரர் நடராஜன் சூளுரை

சேலம்: இந்திய அணியில் இடம் பிடிப்பேன்... ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மன வலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் மாரத்தான் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமானது கிடையாது.

salem,indian team,marathon,fast bowler,natarajan ,சேலம், இந்திய அணி, மாரத்தான், வேகப்பந்துவீச்சாளர், நடராஜன்

அனைவருமே மாரத்தான் ஓடலாம், அனைத்து விளையாட்டுக்குமே ரன்னிங் என்பது தேவைப்படுகிறது என்றார். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடுவேன் என நம்புகிறேன். அதில் நான் நன்றாக விளையாடினால் எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

தற்போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வரும் வேகப்பந்து பேச்சாளர் நடராஜன் அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..

Tags :
|