Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்த நேரம் வரை அணியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் - விராட் கோலி

இந்த நேரம் வரை அணியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் - விராட் கோலி

By: Karunakaran Sun, 06 Sept 2020 6:26:47 PM

இந்த நேரம் வரை அணியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் - விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அறிமுகமானது முதலில் இருந்தே ஆர்.சி.பி. அணிக்காகத்தான் விளையாடி வருகின்றார். இவரது கேப்டன் பதவியல் கடந்த மூன்று வருடங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8-வது, 6-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்தது. அதன்பின், 2016-ல் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் அணி குறித்து விராட் கோலி கூறுகையில், ‘நான் ஆர்சிபி அணிக்காக 12 வருடங்கள் விளையாடிள்ளேன். இது மிகவும் சிறப்பான பயணம். நம்பமுடியாதது. ஆர்சிபி அணிக்காக சாம்பியன் கோப்பையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஏராளமான மக்கள் விரும்புகின்றனர். மூன்று முறை சாம்பியன் பட்டத்தை மகவும் நெருங்கி வந்துள்ளோம். ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போய்விட்டதாக கூறினார்.

virat kohli,rcb,ipl,cricket team ,விராட் கோலி, ஆர்.சி.பி., ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி

நாங்கள் எப்போதும் இணைந்து அதே நோக்கத்துடன்தான் சென்று கொண்டிருக்கிறோம். நான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அதற்கு அணி என் மீது வைத்துள்ள அன்பும், அக்கறையும்தான் என விராட் கோலி கூறினார்.

மேலும் அவர், ஒரு சீசனில் சிறப்பாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் நீங்கள் அதுகுறித்து உணர்ச்சிவசப் படலாம். ஆனால், விசுவாசம் ஆர்சிபி அணியோடு இருக்கும். ஆர்சிபி மிகவும் விசித்திரமானது. ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்த நேரம் வரை, அணியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|