- வீடு›
- விளையாட்டு›
- செஸ் ஒலிம்பியாட் தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேற்றம்
செஸ் ஒலிம்பியாட் தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேற்றம்
By: Nagaraj Sun, 30 Aug 2020 12:48:57 PM
அசத்தியது இந்தியா... செஸ் ஒலிம்பியாட் தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. அரையிறுதியில் போலந்தை வீழ்த்தியது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44வது சீசன் ஆன்லைனில் நடக்கிறது. காலிறுதியில் இந்தியா, வலிமையான ஆர்மேனியாவை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது. 2 சுற்றுக்கள் கொண்ட இதில், இந்திய அணி போலந்தை சந்தித்தது.
முதல் சுற்றில் 6 போட்டிகள் நடந்தன. இந்தியா சார்பில் இளம் வீரர் நிகால் சரின் மட்டும் வெற்றி பெற்றார். ஹரிகா, ஹம்பி ‘டிரா’ செய்தனர். ஆனந்த், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி தோல்வியடைய, இந்தியா (2.0-4.0) என்ற கணக்கில் வீழ்ந்தது.
இரண்டாவது சுற்றில் சுதாரித்துக் கொண்ட ஆனந்த், ஹரிகா, ஹம்பி, விதித்
சந்தோஷ் குஜ்ராத்தி வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தா தோற்க, வனிதா ‘டிரா’
செய்தார். இதில் இந்தியா 4.5-1.5 என வெற்றி பெற்றது. அரையிறுதி 1-1 என சமன்
ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய ‘டை பிரேக்கர்’ நடந்தது. இந்தியா
சார்பில் களமிறங்கிய ஹம்பி, போலந்தின் மோனிகாவை 73வது நகர்த்தலில்
வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று,
பைனலுக்கு முன்னேறியது.