- வீடு›
- விளையாட்டு›
- டாஸ் வென்றது இந்தியா... பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா அணி
டாஸ் வென்றது இந்தியா... பேட்டிங் செய்கிறது ஆஸ்திரேலியா அணி
By: Nagaraj Sun, 25 Sept 2022 9:36:31 PM
ஐதராபாத்: டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும்
கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில்
உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை
தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய
களமிறங்கியது.
இந்த போட்டியில்
வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் முழுவீச்சில்
விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி 12.2 ஓவர் முடிவில்
112 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்துள்ளனர்.