Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • குத்து சண்டை போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

குத்து சண்டை போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

By: Nagaraj Mon, 08 May 2023 10:35:59 PM

குத்து சண்டை போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் ஆண்களுக்கான ஐபிஏ குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் தீபக், கஜகஸ்தானை சேர்ந்த பிபாசினோவுடன் மோதினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிபாசினோவ், 2021 உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியாளர் ஆவார்.

boxing,championship,indians,ipa,match,men,quarter-final , ஆண்கள், இந்தியர்கள், ஐ.பி.ஏ., கால்இறுதி, குத்துச்சண்டை, சாம்பியன்ஷிப், போட்டி

தொடக்கத்தில் சற்று தடுமாறிய தீபக், பின்னர் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தீபக் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதனிடையே மற்ற இந்திய வீரர்கள் சுமித் (75 கிலோ), நரேந்திர பெர்வால் (92 கிலோ) ஆகியோர் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹுசாமுதீன், காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் சவின் எட்வர்டுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஹுசாமுதீன் 5-0 என்ற கணக்கில் அசத்தலான வெற்றியுடன் கால் இறுதிக்கு முன்னேறினார். ஹுசாமுதீன் காலிறுதியில் பல்கேரிய வீரர் சேவியர் டயஸை சந்திக்கிறார்.

Tags :
|
|
|
|