Advertisement

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கையில் காயம்

By: vaithegi Tue, 08 Nov 2022 1:57:14 PM

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கையில் காயம்

அடிலெய்ட் : கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ....... ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சிட்னியில் நாளை (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

மற்றொரு அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை நாளை மறுதினம் அடிலெய்டில் எதிர்கொள்கிறது. அரையிறுதி போட்டிக்கு தயாராவதற்கு இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. வலை பயிற்சியின்போது அவருக்கு வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் வலியால் துடித்தார். உடனே பயிற்சியை விட்டு வெளியேறினார்.

rohit sharma,injured ,ரோகித் சர்மா,காயம்

அவரது கையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. ஐஸ் கட்டியை தடவி அவருடன் காயம் குறித்து பயிற்சி குழுவை சேர்ந்த பேடி அப்டன் பேசிக் கொண்டு இருந்தார். ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பின் ஆய்வு செய்யப்படும். இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆடுவாரா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அவரது காயம் பற்றி மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும். வரும் நவம்பர் 10 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags :