- வீடு›
- விளையாட்டு›
- மூன்றாவது போட்டியையும் வெல்லும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் அணி
மூன்றாவது போட்டியையும் வெல்லும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் அணி
By: Nagaraj Sat, 14 Jan 2023 10:59:02 PM
திருவனந்தபுரம்: இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியா ஆர்வமாக உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் 67 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரளாவின்
திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த
போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியா ஆர்வமாக
உள்ளது.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை
அணி இந்தியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்
உள்ளது. நாளைய போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.