- வீடு›
- விளையாட்டு›
- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள தரம்சாலா உள்பட மூன்று இடங்கள் தேர்வு
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள தரம்சாலா உள்பட மூன்று இடங்கள் தேர்வு
By: Karunakaran Sat, 18 July 2020 12:42:29 PM
இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்துக்கு மேலாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.பி.எல். போட்டி, எதிர்கால போட்டி அட்டவணை மற்றும் உள்ளூர் போட்டிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால், 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல்.யை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டியை நடத்த பெரும்பாலான நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே, ஐ.பி.எல். அட்டவணையை தயாரிக்க முடியும் என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய 3 மைதானங்கள் உள்ளன. ஐ.பி.எல்.போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் தொடக்கம் வரை 5 அல்லது 6 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் இலக்கு வைத்துள்ளது.
இந்திய வீரர்களின் பயிற்சி முகாமுக்கு 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. துபாய், தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 3 இடங்கள் இந்திய வீரர்களின் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி முகாம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.