Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சிட்னியில் குழந்தைகளுடன் பூங்காவில் உலா வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

சிட்னியில் குழந்தைகளுடன் பூங்காவில் உலா வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

By: Nagaraj Thu, 03 Dec 2020 10:11:56 PM

சிட்னியில் குழந்தைகளுடன் பூங்காவில் உலா வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பிறகு விடுதியை விட்டு தற்போது இந்திய வீரர்கள் வெளியே வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. நாளை முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன.

ஐபிஎல் போட்டிகளை முடித்துவிட்டு சிட்னிக்கு வந்த இந்திய வீரர்கள் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் பயிற்சிகளை மேற்கொண்டார்கள்.

kids,park,indian players,photos ,குழந்தைகள், பார்க், இந்திய வீரர்கள், புகைப்படங்கள்

தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பிறகு விடுதியை விட்டு தற்போது வெளியே வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

அங்கு கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்துள்ளார்கள். இந்திய ஒருநாள் டி20 அணிகள் இடம்பெறாமல் டெஸ்ட் அணியில் மட்டும் உள்ள அஸ்வின், புஜாரா, அஜின்கியா ரஹானே ஆகிய மூவரும் தங்களுடைய குழந்தைகளுடன் சிட்னியில் உள்ள பார்க்கில் ஜாலியாக ஊர் சுற்றுகின்றனர். குழந்தைகளுடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

Tags :
|
|