Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடும் - சவுரவ் கங்குலி அறிவிப்பு

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடும் - சவுரவ் கங்குலி அறிவிப்பு

By: Karunakaran Sat, 22 Aug 2020 5:10:29 PM

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடும் - சவுரவ் கங்குலி அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே சென்றதால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது ஆரம்பிக்கும் என ஆவல் எழுந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படாததால், ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடக்கவுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு பின், ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்தியா கொரோனா வைரஸ் காலத்திற்குப் பிறகு விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

indian team,test series,australia,saurav ganguly ,இந்திய அணி, டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா, சவுரவ் கங்குலி

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இந்நிலையில் இந்த வருடத்திற்குள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது என கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, உள்ளூர் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. சூழ்நிலை சரியாக வரும்போது போட்டி நடத்தப்படும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்முன் எதிர்கால திட்டம் குறித்து முறையாக அறிவிக்கப்படும். அடுத்த சில மாதங்களில் கொரோனாவில் இருந்து விடுபடுவோம், உள்ளூர் கிரிக்கெட் சிறந்த பாதுகாப்பு, சுகாதாரச் சூழ்நிலையில் நடைபெறும் என்று நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :