Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கத்தார் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வெற்றி

கத்தார் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வெற்றி

By: Nagaraj Mon, 27 Feb 2023 09:56:03 AM

கத்தார் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வெற்றி

தோகா: இந்திய வீரர்கள் வெற்றி... கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் இந்திய ஜோடி வெற்றி பெற்றுள்ளது.

இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி – கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

doha,mens doubles,qatar open tennis, ,ஆண்கள் இரட்டையர் பிரிவு, கத்தார் ஓபன் டென்னிஸ், தோகா

இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும்.

இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது. பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

Tags :
|