Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது - சவுரவ் கங்குலி

இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது - சவுரவ் கங்குலி

By: Monisha Sun, 12 June 2022 5:08:43 PM

இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது - சவுரவ் கங்குலி

மும்பை : இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் நடைபெற்று முடிந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக இரு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாடின. இதில் இந்த ஆண்டு அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் ஐ.பி.எல் போட்டி, பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், உலகளவில் சிறந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ipl,revenue,epl,ganguly,cricket ,ஐபிஎல், வருவாய், இபிஎல், கங்குலி, கிரிக்கெட்

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து பேசுகையில், கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாமவளர்ச்சி அடைந்து வருகிறது. என்னை போன்ற வீரர்கள் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் கோடிக்களில் சம்பாதிக்கின்றனர்.

ஐ.பி.எல். விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இ.பி.எல்லை விட ஐ.பி.எல் அதிக வருமானத்தை பெறுகிறது. இந்த விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.

Tags :
|
|