- வீடு›
- விளையாட்டு›
- இலங்கையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம்-சுனில் கவாஸ்கர்
இலங்கையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம்-சுனில் கவாஸ்கர்
By: Karunakaran Sun, 14 June 2020 3:51:00 PM
கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது. மருத்துவ பாதுகாப்பு அம்சங்களுடன் அடுத்த மாதம் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் குறைந்தது அக்டோபர் மாதம்வரை இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது பாதுகாப்பானதாக இருக்காது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடந்தால் அதன் பிறகு அக்டோபரில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டித் தொடரை நடத்துவது கடினமாகி விடும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம். அது பருவமழை காலம் என்பதால் அந்த சமயத்தில் இந்தியாவில் இந்த போட்டியை வைப்பதற்கு பதிலாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
அணியினர் தலா ஒரு தடவை மட்டும் மோதும் வகையில் போட்டி அட்டவணையை சுருக்க வேண்டும் எனவும், இந்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டியை நடத்த சாத்தியம் உள்ளது. இலங்கை இல்லையெனில் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தலாம் என்றும் கூறியுள்ளார்.