Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • குதூகலமாக தொடங்குகிறது ஐ.பி.எல்., தொடர்; அடித்து நொறுக்குமா சென்னை அணி

குதூகலமாக தொடங்குகிறது ஐ.பி.எல்., தொடர்; அடித்து நொறுக்குமா சென்னை அணி

By: Nagaraj Fri, 31 Mar 2023 10:02:22 AM

குதூகலமாக தொடங்குகிறது ஐ.பி.எல்., தொடர்; அடித்து நொறுக்குமா சென்னை அணி

அகமதாபாத்: கிரிக்கெட் ரசிகர்களை உயிர்த்துடிப்பாக விளங்கும் ஐபிஎல் தொடர் போட்டிகள் இன்று அகமதாபாத்தில் கொண்டாட்டமும், குதூகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியே அனல் பறக்கும் என்று தெரிகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று அகமதாபாத்தில் கோலகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரை வெற்றியுடன் சென்னை அணி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ரோஹித் சர்மாவிடம், இந்த ஐபிஎல் தொடருடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

chennai,gujarat,clash of teams,ipl,starts today ,சென்னை, குஜராத், அணிகள் மோதல், ஐபிஎல், இன்று தொடக்கம்

அட என்னங்க இது. இந்த கேள்வியை நான் 2-3 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன். இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா என 2-3 ஆண்டுகளாகவே என்னிடம் கேட்டு வருகிறார்கள். அவர் செம ஃபிட்டாக இருக்கிறார். இன்னும் சில சீசன்களில் விளையாட முடியும். இந்த சீசனில் மும்பை அணி வழக்கம்போல வலிமையாக இருக்கிறது. நாங்கள் தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டோம். ஆரம்பத்திலேயே வெற்றிகளைக் குவிக்க நாங்கள் முயற்சி மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

தோனி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் கூறுகையில் ‘தோனி போன்ற ஃபினிஷரை எங்கும் பார்க்க முடியாது. மேட்ச்சை வெற்றிகரமாக முடிப்பதில் அவரை விட சிறந்த வீரர் கிரிக்கெட்டில் இல்லை. அணி என்னை எந்த இடத்தில் களம் இறங்க கேட்டுக் கொண்டாலும் அதில் இறங்கி சிறப்பாக விளையாடுவேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|