Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீருக்கு தூக்கு தண்டனை... ரசிகர்கள் அதிர்ச்சி

ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீருக்கு தூக்கு தண்டனை... ரசிகர்கள் அதிர்ச்சி

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:12:30 AM

ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீருக்கு தூக்கு தண்டனை... ரசிகர்கள் அதிர்ச்சி

கத்தார்: ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீருக்கு ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளமை கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கால்பந்து வீரர்களின் சர்வதேச கூட்டமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது நாட்டின் பெண்களின் உரிமைகளுக்காகவும் அடிப்படை சுதந்திரத்திற்காக பிரசாரம் செய்த கால்பந்து வீரர் அமீர் நசீர், ஈரானில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார் என்ற அறிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

death penalty,security guards,amir,footballer,death penalty ,மரண தண்டனை, பாதுகாப்பு வீரர்கள், அமீர், கால்பந்தாட்ட வீரர், மரண தண்டனை

அமீருக்கு நாங்கள் துணை நிற்கிறோம். அவரது தண்டனையை உடனடியாக நீக்க வேண்டுகோள் விடுக்கிறோம் என பதிவிட்டுள்ளது. ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர் அந்நாட்டின் பீரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

ஈரானில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டிலும், பாதுகாப்பு வீரர்கள் பலியானதை சுட்டிக் காட்டியும் அமீருக்கு ஈரான் அரசாங்கம் மரண தண்டனை விதித்துள்ளது.

Tags :
|