- வீடு›
- விளையாட்டு›
- அவருடன் கைகுலுக்கியதை கடவுளுடன் கைகுலுக்கியது போல உணர்ந்தேன்-யுவராஜ்சிங்
அவருடன் கைகுலுக்கியதை கடவுளுடன் கைகுலுக்கியது போல உணர்ந்தேன்-யுவராஜ்சிங்
By: Karunakaran Fri, 12 June 2020 1:56:08 PM
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர்
யுவராஜ்சிங் ஓய்வு பெற்று ஓராண்டாகிறது. இந்நிலையில் யுவராஜ்சிங் சர்வதேச
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஆவதை நினைவுப்படுத்தி சச்சின்
தெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
யுவராஜ்சிங்கின் சிக்சர் அடிக்கும் திறமையை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அவரால் உலகில் எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்க முடியும் என்று சச்சின்
யுவராஜ்சிங்கை புகழ்ந்து கூறியுள்ளார். இதற்கு யுவராஜ்சிங் தனது ட்விட்டர்
பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி சச்சின். நான்
உங்களை முதன்முதலில் சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது
போன்று உணர்ந்தேன். கடினமான காலக்கட்டங்களில் உறுதுணையாக இருந்து என்னை
வழிநடத்தினீர்கள். என் திறமை மீது நம்பிக்கை வைக்க கற்று கொடுத்தீர்கள்
என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், என்னை ஊக்கப்படுத்தி
முன்னேற்றப் பாதைக்கு செல்ல நீங்கள் செய்த அனைத்து விஷயங்களையும், நானும்
மற்ற இளைஞர்களுக்கு செய்வேன். உங்களுடன் இன்னும் பல மறக்க முடியாத
அற்புதமான நினைவுகளை எதிர்பார்க்கிறேன் என்று புகழ்ந்து தனது நன்றியை
தெரிவித்துள்ளார்.