Advertisement

இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது - சேவாக்

By: Karunakaran Sun, 20 Sept 2020 6:27:41 PM

இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது - சேவாக்

13வது ஐபிஎல் 2020 சீசன் நேற்று மாலை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது.

அம்பதி ராயுடு மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் அரைசதம், சாம் கர்ரன் அதிடி ஆட்டம் ஆகியவற்றால் 4 பந்துகள் மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆரம்ப போட்டியே பரபரப்பாகவும், விறுப்பாகவும் சென்ற முதல் போட்டியிலேயே ரசிகர்கள் சுண்டி இழுக்கப்பட்டனர்.

italy,vada pav,sehwag,csk ,இத்தாலி, வாடா பாவ், சேவாக், சி.எஸ்.கே.

இதுகுறித்து விரேந்தர் சேவாக் கூறுகையில், ஐ.பி.எல். போட்டிக்கு இது சிறந்த தொடக்கம். இந்த போட்டியை பார்க்கும்போது இத்தொடர் பட்டைய கிளப்பும் பட்டாசாக இருப்பது போல் தெரிகிறது. அம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ் சூப்பராக விளையாடினர், ஆனால், இறுதியில் சாம் கர்ரனின் கேமியோ மாறுபட்டதாக இருந்தது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், வடா பாவ்-ஐ மீண்டும் இட்லி வென்றது #CSKvMI என்று குறிப்பிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்த்து கொண்டது.

Tags :
|
|